Sunday 16 October 2011

PAST-PRESENT-FUTURE...

இரவு பணியில் கண்கள் சொக்கி 
ஆள் யார் வருவார் என வாசல் பார்த்திருந்தேன்.
வந்தவர் அகவை எழுபதை தொட்டவர்
காலை காய்கறி வாங்கவந்தவர் வசம் நான்...
அவரின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தோழர்களை பற்றி
என்னிடம் (!) அளவளாவி பண்ருட்டி ரமணி என்கிற
வெங்கடரமணி (அவர் பேசியதில் எனக்கு பரிச்சியமான
பெயர் ) நடராஜ லஞ்ச் ஹோம் என பல பல பேசிக்கொண்டு ...
நம்புங்கள்...என் மனதில் பிளாஷ்பாக் எதுவும் ஓடவில்லை.
இவர் வயதில் நான் எதை பற்றி பேச போகிறேன் என்று
நினைத்தேன்.. ஒன்றும் புரியவில்லை ..
அது சரி..நிகழ்காலமே ஜிந்தாக்கு ஜிந்தக ஜிந்த ஜிந்தாகு...
எதிர் காலம் என்ன வைத்திருக்கிறது மூடிய கைகளில்?