Saturday 21 January 2012

அன்னா ஹசாரே, அருந்ததி ராய், வேற யாரு பேரு சொல்லுங்க

ஊழலை அழிக்க அல்லது எதிர்க்க ஒரு கூட்டம் - 

அன்னா ஹசாரே வழியிலோ அல்லது அவரவர் வழியிலோ...
அரசுகளின் அடாவடிகளை எதிர்க்க ஒரு கூட்டம் -
ராய், மேதா பட்கர் வழி அல்லது அவரவர் வழி..
ஆனால், இவ்வளவு  தாண்டவம் ஆடிய 
தானே புயல் நிவாரணத்தை 
டாஸ்மாக் கடைகள் மூலம் பகற்கொள்ளையாக 
மக்களிடம் இருந்து திரும்ப பெற்ற 
அரசாங்கத்தை கண்டிக்க எந்த ஊடகமும் 
வாய் திறவா விந்தை
எங்கள் மண்ணில் அன்றி வேறு 
எங்கு நடக்கும்...
துக்ளக் சோ ராமசாமி இதற்கும் 
எதாவது "அர்த்த சாஸ்த்ரம் " சொல்வாரா?

ஐம்பெரும் பூதங்கள்...அடுத்து யார்?

பஞ்ச பூதங்களில் 
நீரும், காற்றும் 
தங்கள் வேகத்தை எங்களுக்கு 
உணர்த்தி விட்டன..
அடுத்து யார் வருவாரோ...
நெருப்பு மூளுமா?
நிலம் குளுங்குமா?
 வானம் மண் வாசனை பார்க்குமா?
யார் எப்படி போனால் என்ன...
ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு 
நல்லா கல்லா கட்ட எப்போதும்                                                                                                                               எங்கள் வணிக பெருமக்கள் மட்டும் தயார் நிலையில.....