Saturday 9 March 2013

நான்கு வரி எழுதி பார்த்தேன் 
நன்றாய் இருந்தது என நினைத்து 
நண்பர்களுடன் பகிர்ந்தேன்..

யாப்பு, அசை, சீர் இல்லையாம் 
அங்காங்கே தளை தட்டுகிறதாம் 
ஒழுங்கு இல்லையாம் 
உள் கட்டமைப்பு அறவே 
சரி இல்லையாம்...

அன்பர்களே இன்னும் 
சற்றே மெனக் கெடுங்கள்...
சற்றேனும் தமிழ் 
தென்பட்டால் தகவல் 
பக்கத்தில் கொஞசம் 
பகிருங்கள்...