Sunday 10 July 2011

முதல்ல இல்ல ஆனா இப்ப நாங்கதான்

முதலில் இந்திய அமைதி படை
வடக்கில் சல்வா ஜுடும் (ஆனா சரியாய் சுடும்)
அடுத்து தில்ஷன் என்கிற சென்னை சிறுவன் பின்மண்டையில்
துப்பாக்கி சுடும் பயிற்சி!
ஆனாலும் கட்டுப்பாட்டுக்கும் கடமைக்கும்
பேர் "போனது" இந்திய ராணுவம்!
.
.
.
ஒவ்வொரு தோட்டாவும் கணக்குல வரணுமே...
ராணுவத்துல யாரும் "டாலி" படிக்கலையோ?
விவேக் காமெடில வரமாதிரி என்னைய புடிச்சி
கேட்க போறாங்கோ "நீ ரொம்ப பேசற,
தீவிரவாதியான்னு செக் பண்ணுங்கப்பா "

தாய் மண்ணே வணக்கம்.
சுஜாதாவின் "அவர்கள் வருகிறார்கள்" கதையில்
ஒரு வரி: நமது மண்ணில் நமது மக்களையே ராணுவம்
வேட்டையாடும் விபரீதம் என்று தோன்றியது?


யோசித்தால் ரொம்ப கோபம் வருகிறது.
என்ன செய்யலாம்?
யோசிப்போம் அடுத்த தோட்டா பாயும்வரை....

No comments:

Post a Comment