Monday 25 July 2011

சமச்சீர் கல்வி தந்த முதியோர் கல்வி

புத்தகம் கொடுக்காமல் இரண்டு மாதமாய்
படுத்தி எடுக்கிற மகனின்  மூலமாக
நான் கற்று (?)கொண்ட சில தகவல்கள்....

Almond என்றால் வாதுமை அல்லது வாதங்க்கொட்டை..
அரசமரத்துக்கு ஆங்கிலத்தில் pipal or peepal tree..
wallnut என்றால் walnut or wallnut..எது சரி?...

எங்கள் ஊரில் 4 பெரிய புத்தக கடைகள்,
15க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்...
தூசி படிந்து மூலையில் கிடந்த விலங்குகள்,
தாவரங்கள், தலைவர்கள், இன்னபிற
chart பேப்பர் மூன்று ருபாய்...

வள்ளுவர் படத்தின் மீது பேப்பர் ஒட்டும் கொடுமை..
அவர் என்ன தி.மு .க.வின் கொ.ப.செ.வா?

தனக்கு ஒரு பிள்ளை இருந்தால் வீணான
நாட்களும் விரயமான பணமும்
மனதை வலிக்க செய்து இருக்கும்...
வீம்பிற்கும் வெட்டு கௌரவத்திற்கும்
முதல் பலி கல்வி
அடுத்து பெற்றோரின் சம்பாத்தியம்...

திருந்தவே மாட்டார்களா?
துக்ளக் சோதான் சான்று தரவேண்டும்.



1 comment:

Sathiya S said...

மகன் செத்தாலும் பரவாயில்ல, மருமக தாலி அறுக்கணும்னு நினைக்கிற மாமியார் கதைதான்.

Post a Comment