Tuesday 1 May 2012

சட்டமன்றத்தில் அலைபேசியில்
படம் பார்த்தால் குற்றம்...
அலைபேசி, அண்டவலையத்தில்
படமாக வந்தாலும் குற்றம்...
மக்கள் பிரதிநிதிகள் என்னதான் செய்ய...?
நாக்கை கடித்து, கையை நீட்டி
பேச கூடாது என்று எந்த சட்டத்தில்
என்று கேட்கும் எதிர் கட்சி தலைவர்...
அவர் கட்சியின் அவை தலைவரிடம்
பாடம் படிக்காமல் மக்களே மக்களே என்று
வசனம் பேசுகிறார்...
தலைவா...நடிக்கவே ஒத்திகை பார்க்கும்
நீங்கள், இதற்கு எந்த துணிவில்
ஒத்து கொண்டீர்கள்...
உங்கள் எதிரி வெளியில் இல்லை...
உங்களில் ஒருவன், உங்கள் கட்சியில் ஒருவன்தான்
உங்களுக்கு எல்லாம் தப்பு தப்பாய்
சொல்லி தருகிறார்கள்...
ஏதோ உள்குத்து இருக்கு...
உஷார் ஆயிடு பாண்டி...

No comments:

Post a Comment